Skip to main content

Book Review - காலச் சக்கரம்


காலச் சக்கரம் 


வெளியீடு : வானதி பதிப்பகம் 
ஆசிரியர்  : நரசிம்மா 

விறுவிறுப்பான கதை, அதில் மர்மங்களும் அரசியலும்  இருப்பதை விரும்பும் நபரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கான புத்தகம் தான் இது! 

வடகோட்டில் இருக்கும் ஒரு அரசியல் வாரிசின் குடும்பத்தில் நிகழும் மர்மங்களுக்கும் தமிழ் நாட்டில் இருக்கும் ஒரு ஆச்சாரமான குடும்பத்திற்கும் என்ன தொடர்பு? இதை முழுமையாக பேசியிருக்கிறார் கதையின் ஆசிரியர். காஷ்மீரில் தொடங்கும் கதை, காசியில் முடிகிறது. கதையில் மர்மங்களுக்கும், மாந்திரீகங்களுக்கும், விறுவிறுப்புக்கும் கொஞ்சமும் பஞ்சம் இருக்காது. 

கதை பல்வேறு காலகட்டங்களில் பயணிக்கும் எ.கா.: 1940கள் முதல் 1980வரை காலங்கள் முன்-பின்னாக அத்தியாயங்களில் வரும். இதில் வாசகர்களுக்கு எந்த குழப்பமும் வராதபடி ஆசிரியர் அதை சிறப்பாக செய்திருக்கிறார். 



கதையின் முதற்பாதியில் போடப்படும் எண்ணற்ற  மர்ம முடிச்சுகள் கதையின் பிற்பாதியில் ஒவ்வொன்றாக அவிழ்க்கப்படும். அந்த இடமானது வாசகர்களை நகம் கடிக்க வைக்கிறது. 

புத்தகத்தின் முன்னுரையில் ஆசிரியர்  'இக்கதை ஒரு அரசியல் கிசுகிசுவை மையமாக கொண்டது' என குறிப்பிட்டுள்ளார். அதன்படியே உங்களுக்கும் இதை படிக்கும்பொழுது கடந்தகால அரசியல் நிழலாடும். இந்த இடத்தில் நான் தனிப்பட்ட முறையில் சில விடயங்களில் மாறுபடுகிறேன் (குறிப்பாக  நிகழ்வுக்கு காரணம் என  குறிப்பிடப்படும் செயலில்) , எனினும் புத்தகம்  நிச்சயம் விருந்தாக இருக்கும். 
 
இது ஆசிரியரின் முதல் புத்தகம் என்றே நம்பமுடியாதபடி எழுதியுள்ளார். இவரின் அனைத்து  நூல்களும்  இவ்வாறே விறுவிறுப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. இவரின் மற்ற நூல்களை பற்றி வரும் நாட்களில் எழுதுகிறேன்.  

பி.கு.
 
இந்த புத்தகம் எனக்கு என்னுடைய பள்ளி ஆசிரியரால் (திரு. ஜெயராம்) அன்பளிப்பாக வழங்க பட்டது என்பது கூடுதல் மகிழ்ச்சி.   தற்செயலாக அவரை புத்தக திருவிழாவில் வெகு காலம் சென்று சந்தித்தேன், என் பரிசு என்று இதனை அளித்தார். 

தினேஷ்
திருவள்ளுவர் ஆண்டு 2051 ஆடி 19
08-03-2020

Comments

Popular posts from this blog

My Drama

வி வேகானந்தர் காலிஃபோர்னியாவில் பேசியது பிரசித்தி பெற்ற உரை. ' சகோதர, சகோதரிகளே! ' என்று அவர் பேசியது இன்றும் பலரால் நினைவுகூரப்படுகிறது. அந்த நிகழ்வை போற்றும் வகையில் அந்த பயணத்தின் பின்னணியை கூறும் விதமாக எடுக்கப்பட்டது இந்த நாடகம்.  பொதுவாக என்னுடைய பள்ளியில் 10th & +2 மாணவர்களை நாடகங்களில் நடிக்கவைக்க மாட்டார்கள், காரணம் பொதுத்தேர்வு. ஆனால், 2013 ஆண்டு நான் 12ம் வகுப்பு மாணவன், அதுவும் பொதுத்தேர்வுக்கு 2 மாதங்களே இருந்த காலகட்டம். அவ்வாண்டு விவேகானந்தரின் 150ம் ஆண்டு கொண்டாட்டம். இந்த நாடகத்தில் நடிக்க வேண்டும் என பலரை தேடிய பிறகு என்னை தேர்தெடுத்தனர் தமிழ்த்துறை ஆசிரியர்கள் திரு.முத்து மற்றும் திரு.குமரன். அதற்காக பள்ளி நிர்வாகத்திடம் சிறப்பு அனுமதி பெறப்பட்டது. என்னுடைய 12ம் வகுப்பு தேர்வு முடிவுக்கு அவர்களே பொறுப்பென கையெழுத்திட்டனர்.  இவை அனைத்திற்கும் காரணம் ஒன்றே, அது 150ம் ஆண்டு கொண்டாட்டம் என்பதால்  விவேகானந்தர் என்ற நபரை பார்வையாளர்களின் கண்முன்னே நிறுத்தவேண்டும். நான் அந்த பாத்திரத்திற்கு நியாயம் செய்தேனா என்று எனக்கு தெரியாது ஆனால், நிச்சயம் பேரை கெடுக...

Book Review - சில நேரங்களில் சில மனிதர்கள்!

சில நேரங்களில் சில  மனிதர்கள்! ஆசிரியர்: ஜெயகாந்தன்  வெளியீடு: மீனாட்சி புத்தக நிலையம்   எ ழுத்துலகின் பீஷ்மன் என்று புகழப்படும் ஜெயகாந்தனால் ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது இந்த கதை. ஜெயகாந்தன் எழுதிய ' அக்னி பிரவேசம் ' என்ற சர்ச்சைக்குரிய சிறுகதையை மையமாக வைத்து எழுதப்பட்டதே இந்த நெடுங்கதை. சில நேரங்களில் சில மனிதர்கள் கதயை பார்க்கும் முன், அக்னி பிரவேசம் பற்றி தெரிந்து கொள்வது அவசியமாகிறது. அக்னி பிரவேசம் கதையின் சுருக்கம் இதுவே:  கல்லூரிக்கு முதல் நாள் செல்லும் பாரம்பரிய பிராமண  குடும்பத்தை சார்த்த   இளம் பெண் சந்தர்ப்ப சூழ்நிலையால் முன்பின் அறிமுகம் இல்லாத மூன்றாம் நபருடன் காரில் வீடு திரும்ப நேரிடுகிறது. தனிமையை பயன்படுத்திக்கொள்ளும் அந்த வாலிபர், பெண்ணை தன் இச்சைக்கு பயன்படுத்திவிட்ட பிறகு வீட்டில் விட்டு செல்கிறார். நடந்தவற்றை தாயிடம் சொல்கிறாள் மகள். கைம்பெண்ணான  தாய்  இந்த விடயத்தை மகனுக்கு கூட சொல்லாமல், பெண்ணை மாற்றானுக்கு மணம்முடிப்பதாக கதை முடிகிறது. இன்றைய காலகட்டத்திற்கு இது சாதாரணமாக, முற்ப...

Book Review - மாபெரும் தமிழ்க் கனவு

மாபெரும் தமிழ்க் கனவு வெளியீடு: தமிழ் திசை பாரதி புத்தகாலயதின் வேண்டுகோளின்படி நான் படித்த புத்தகத்தை பற்றிய அறிமுகத்தை விடியோவாக பதிவேற்றியுள்ளேன். மாபெரும் தமிழ்க் கனவு ஒரு கடல், அதை பற்றிய அறிமுகத்தில் நான் ஒரு சிறு துளியை மட்டுமே பகிர்ந்துள்ளேன். தினேஷ் திருவள்ளுவர் ஆண்டு 2051 வைகாசி 26 08.06.2020