Skip to main content

Book Review - வேலையற்றவனின் டைரி


வேலையற்றவனின் டைரி 

ஆசிரியர்: ஜி.ஆர்.சுரேந்திரநாத் 

வெளியீடு: இந்து தமிழ் திசை 


நம்மை சுற்றி பல நகைச்சுவைகள், கேளிக்கையான சம்பவங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றது. காலஓட்டத்தில் பெரும்பாலானோர் அதை கவனிப்பதில்லை அல்லது அசட்டையாய் இருந்துவிடுகின்றோம். ஆனால், அவை அனைத்தையும் - பள்ளிக்கூடம் போன நாள் தொடங்கி சினிமா பார்த்தது; பஜ்ஜி சாப்பிட்டது; நண்பர்களுடன் கதை அடித்தது; காதல் வயப்பட்டது - ஓரிரு பக்கங்களில் படிக்கநேர்த்தால்? அதுவே இப்புத்தகம்!! 

இக்கட்டுரை இந்து தமிழின் இணைப்பிதழில் தொடராக (வரம் ஒரு அத்தியாயம்) வெளிவந்த சமயத்தில், தற்செயலாக ஒரு நாள் படிக்க நேர்ந்தது. அதன்பின் வாரம் தவறாமல் படிக்க தொடங்கினேன். படிப்பதில் பலவகை genre உள்ளது, அதில் இப்புத்தகம் / கட்டுரை தொகுப்பு lite reading material. பெரியளவில் மூளைக்கு வேலை கொடுக்காமல் பொழுதுபோக படிக்கவேண்டிய கட்டுரை தொகுப்பு. 


மத்திம வயதில் இருக்கும் பெரும்பாலானோருக்கு பகிர்ந்துகொள்ள பழங்கதைகள் இருக்கும். இளம்வயது விளையாட்டுகள், பதின்ம வயது காதல், நண்பர்களுடனான பொழுதுகள்... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அப்படிப்பட்ட சிறுசிறு நினைவுகளை கிளறும் வண்ணம் எழுதப்பட்டுள்ள கட்டுரைகளின் தொகுப்பே இது. 

பள்ளி காலங்களில் வீட்டில் பலசரக்கு கடைக்கு சென்று வர கமிஷன் அடிக்கும் இடம் இங்கு பெரும்பாலானோருக்கு தமது வாழ்விலும் பொருத்திப் பார்க்க முடியும். இளையராஜா, பெற்றோர் கொடுக்கும் பழைய ரூபாய் நோட்டுகளின் வாசனை, ஞாயிறே இல்லை என்று கிளப்பிவிடப்படும் புரளிகள் என பல nostalgia feel கொடுக்கும் கட்டுரை தொகுப்புகள் உள்ளன. 

கடந்தகால நினைவுகளில் மூழ்கி எழ அவசியம் படிக்கவேண்டிய புத்தகம்.  

தினேஷ் 
03-04-2023


Comments

Popular posts from this blog

Book Review - சில நேரங்களில் சில மனிதர்கள்!

சில நேரங்களில் சில  மனிதர்கள்! ஆசிரியர்: ஜெயகாந்தன்  வெளியீடு: மீனாட்சி புத்தக நிலையம்   எ ழுத்துலகின் பீஷ்மன் என்று புகழப்படும் ஜெயகாந்தனால் ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது இந்த கதை. ஜெயகாந்தன் எழுதிய ' அக்னி பிரவேசம் ' என்ற சர்ச்சைக்குரிய சிறுகதையை மையமாக வைத்து எழுதப்பட்டதே இந்த நெடுங்கதை. சில நேரங்களில் சில மனிதர்கள் கதயை பார்க்கும் முன், அக்னி பிரவேசம் பற்றி தெரிந்து கொள்வது அவசியமாகிறது. அக்னி பிரவேசம் கதையின் சுருக்கம் இதுவே:  கல்லூரிக்கு முதல் நாள் செல்லும் பாரம்பரிய பிராமண  குடும்பத்தை சார்த்த   இளம் பெண் சந்தர்ப்ப சூழ்நிலையால் முன்பின் அறிமுகம் இல்லாத மூன்றாம் நபருடன் காரில் வீடு திரும்ப நேரிடுகிறது. தனிமையை பயன்படுத்திக்கொள்ளும் அந்த வாலிபர், பெண்ணை தன் இச்சைக்கு பயன்படுத்திவிட்ட பிறகு வீட்டில் விட்டு செல்கிறார். நடந்தவற்றை தாயிடம் சொல்கிறாள் மகள். கைம்பெண்ணான  தாய்  இந்த விடயத்தை மகனுக்கு கூட சொல்லாமல், பெண்ணை மாற்றானுக்கு மணம்முடிப்பதாக கதை முடிகிறது. இன்றைய காலகட்டத்திற்கு இது சாதாரணமாக, முற்ப...

பொன்னியின் செல்வன் பாதையிலே - 2

கல்கியின் 'பொன்னியின் செல்வன்' பாதையில் இரண்டாம் நாள். முந்தைய பதிவை இங்கே படிக்கவும் நாள் -2 இன்று முழுவதும் சோழர்கள் தங்களின் கலை என்னும் அஸ்திரம் கொண்டு மூர்ச்சை அடைய செய்யப்போகிறார்கள் என்பதால் கதிரவன் தனது கதிர்களை பாய்ச்சும் முன்னே தாக்குதலை எதிர்கொள்ள தயாராகினேன்.  பொன்னியின் செல்வன் கதையில் மிக முக்கியமான கதாபாத்திரமான 'சேத்தன் அமுதனின்' தோட்டத்தை தான் முதலில் பார்க்கப்போனோம். அதை தேடி வெகுதூரம் அழைய வேண்டிய அவசியம் இருக்கவில்லை. காரணம் நாங்கள் தங்கி இருந்த விடுதிக்கு மிக அருகே அந்த வரலாற்று இடம் அமைந்திருந்தது.  சேத்தன் அமுதன் இந்த இடத்தில் தான், தனது தாயுடன் பூந்தோட்டம் அமைத்து சிவனுக்கு கைங்கரியம் செய்துவந்தான். வந்தியத்தேவன் சேத்தனை தஞ்சை அரண்மனை வாயிலில் செம்படை வீரர்கள் அணிவகுப்பின்பொழுது சந்தித்தான். (இந்த செம்படையை மையமாக வைத்தே 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தில் செல்வராகவன் செம்படை சோழர்களுக்கு உதவுவதை போல் கதை வைத்தார்). இந்த சேத்தன் அமுதன் தான் பின்னாளில் உத்தம (எ) மதுராந்தக சோழனாக அரியணையில் அமர்ந்தான்.  அத்தோட்டம் தற்பொழுது சிவன் திருக்கோவில...

My Drama

வி வேகானந்தர் காலிஃபோர்னியாவில் பேசியது பிரசித்தி பெற்ற உரை. ' சகோதர, சகோதரிகளே! ' என்று அவர் பேசியது இன்றும் பலரால் நினைவுகூரப்படுகிறது. அந்த நிகழ்வை போற்றும் வகையில் அந்த பயணத்தின் பின்னணியை கூறும் விதமாக எடுக்கப்பட்டது இந்த நாடகம்.  பொதுவாக என்னுடைய பள்ளியில் 10th & +2 மாணவர்களை நாடகங்களில் நடிக்கவைக்க மாட்டார்கள், காரணம் பொதுத்தேர்வு. ஆனால், 2013 ஆண்டு நான் 12ம் வகுப்பு மாணவன், அதுவும் பொதுத்தேர்வுக்கு 2 மாதங்களே இருந்த காலகட்டம். அவ்வாண்டு விவேகானந்தரின் 150ம் ஆண்டு கொண்டாட்டம். இந்த நாடகத்தில் நடிக்க வேண்டும் என பலரை தேடிய பிறகு என்னை தேர்தெடுத்தனர் தமிழ்த்துறை ஆசிரியர்கள் திரு.முத்து மற்றும் திரு.குமரன். அதற்காக பள்ளி நிர்வாகத்திடம் சிறப்பு அனுமதி பெறப்பட்டது. என்னுடைய 12ம் வகுப்பு தேர்வு முடிவுக்கு அவர்களே பொறுப்பென கையெழுத்திட்டனர்.  இவை அனைத்திற்கும் காரணம் ஒன்றே, அது 150ம் ஆண்டு கொண்டாட்டம் என்பதால்  விவேகானந்தர் என்ற நபரை பார்வையாளர்களின் கண்முன்னே நிறுத்தவேண்டும். நான் அந்த பாத்திரத்திற்கு நியாயம் செய்தேனா என்று எனக்கு தெரியாது ஆனால், நிச்சயம் பேரை கெடுக...